Raavannan [2011] - SujeethG - TAMIL RAP - Video
PUBLISHED:  Jan 14, 2015
DESCRIPTION:
Title: Raavannan [இராவண்ணன்]
Artist: SujeethG
https://www.facebook.com/SujeethG
Music & Camera: Santhors (SME)
https://www.facebook.com/RecordLabelSME
Editing: Kanath Visual Fx Studio
https://www.facebook.com/kanath
Produced By: SujeethG

#இராவண்ணன் #tamilrap #sujeethg

வான்மீகி வரைந்த இராமாயணத்தால்
ஆரியன் இராமன் ஆண்டவனான்
அயலவன் வாலி குரங்கானான் - என்
முப்பாட்டன் இராவண்ணன் அரக்கனானான்
ஆரியத்திற்கு நான் இராவண்ணன்
தென் திசை பார்க்கின்றேன் என் சொல்வேன் என்றன்
சிந்தை யெல்லாம் தோள்களெல்லாம் பூரிக்குதடா
அன்றந்த லங்கையினை ஆண்ட மறத் தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்
என் தமிழர் மூதாதை என் தமிழர் பெருமான்
இராவண்ணன் காண் அவன் நாமம் இவ்வுலகம் அறியும்
---
ஆரியத் தி;ட்டத்துக் கடிக்கோணோம் ஆப்பு, செந்தமிழ் வீரர் நாம் மறப்பதே தப்பு
பல களம் கண்டு நாம், அடைந்தோம் மூப்பு, உலகினில் எமக்கில்லை, தொடர்ந்து தோற்பு
நரிகள் வந்து புலி காட்டை ஆளுமோ, கயவர் எமில் ஏறி ஆளவும் மாளுமோ
அஞ்சும் வழக்கமே தமிழினதுக்கில்லை, வந்து புகுந்தால் நீ கொடுத்து விடு தொல்லை
ஆரியர் கொட்டத்திற் கடிக்கோணோம் ஆப்பு, செந்தமிழ் வீரன் நீ மறந்தால் தப்பு
தன்மானம் காப்பது தனித்த பொறுப்பு, தடை உடை படை எடு அதுதான் சிறப்பு
ஆண்டதமிழ்க்குடி, எழுந்து மறுபடி, ஆழப்போகுது எண்ணப்படி
மீண்டு முறைப்படி, வாழ்வு வரும்படி, எங்கும் விழப்போது விண்ணின் இடி
என்ளுள் சிறுத்தையே பாய்ந்துதே நீ வெளி வா! எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலியெனச் செயல் செய்யப் புறப்படு வெளியில், என்ளுள் சிறுத்தையே பாய்ந்தே நீ வெளி வா!
---
தென் திசை பார்க்கின்றேன் என் சொல்வேன், என் சிந்தை தோளெல்லாம் பூரிப்படா
அன் றந்த லங்கை ஆண்ட மறத் தமிழன், ஐயிரு திசை தன் புகழ் வைத்தோன்
எம் தமிழ் மூதாதை எம் பெருமான், இராவ(ண்)ணன் காண் அவன் நாமம் உலகறியும்
---
தாயே தமிழே சொல்லி நடித்தால் ஆப்பு, - தமிழின் பேரை வித்துப் பிழைத்தால் ஆப்பு
தமிழை அழிக்க வரும் தமிழனுக்கும் ஆப்பு, - முழுதாய் மூச்சிழுத்து ஓங்கி அடி ஆப்பு
வெட்டி அழித்தாலும் தழைக்கும் தமிழினம், - கொத்தி ஒழித்தாலும் பிழைக்கும் தமிழினம்
முட்டி முறித்தாலும் முளைக்கும் தமிழினம், - வெற்றி நடைபோடப் பிறந்தது தமிழினம்
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன்றி தோன்றிய மூத்த குடியென்று மட்டும் திரியாதே
கல்போட்டு மண்போட்டு காலத்தின் பின் போட பகைமை துடிக்கிறது என்றும் மறக்காத
காலத்தோடேயோடு என்னாளும் நீ ஓடு - உலகத்தின் முன்னோடு உணர்வோடே நீ ஓடு
உந்தன் பேர் கெடுக்க நினைக்கிறான் கயவன் உன்னைத் தீயனாக்க துடிக்கிறான் பகைவன்
தமிழ் மண்ணின் ஈரம் நாம், தமிழ் மண்ணின் வீரம் நாம், தமிழ் வெல்லப் போவோம் தமிழாகிப் போவோம் நாம்
இராவண்ணன் பேரன் நான், அறிந்ததைச் சொல்வேன் நான், வரி கொண்ட தீரன் நான் புலியாகப் பாய்வேன் நான்
follow us on Twitter      Contact      Privacy Policy      Terms of Service
Copyright © BANDMINE // All Right Reserved
Return to top